உக்ரைன் மீது ரஷ்யா போரை தீவிரப்படுத்தி வருவதால் அதிபர் ஜெலன்ஸ்கி வெளிநாட்டுப்பயணங்களை தவிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையே போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் பொருளாதார ரீதியாக பெரும் இழப்புகளை சந்தித்து வருகிறது. இருப்பினும் அமெரிக்க உள்ளிட்ட ஆதரவு நாடுகள் உக்ரைனுக்கு உதவி வருவதால் அந்நாடு தொடர்ந்து போரை சந்தித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா மேலும் போரை தீவிரப்படுத்த உள்ளதாக தெரிவித்ததால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மேற்கொள்ள இருந்த பயணங்களை காலவரையின்றி தள்ளி வைப்பதாக உக்ரைன் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.