சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி தெப்பத்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கிய நிலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் ஊஞ்சல் உற்சவத்தில் காட்சியளித்தார்.
இதையடுத்து சிம்மாசனத்தில் எழுந்தருளிய அம்மன் வான வேடிக்கைகளுடன் தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.