கன்னிப் பெண்களுக்கு வரம் தரும் பகவதி அம்மன்!
Oct 26, 2025, 09:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கன்னிப் பெண்களுக்கு வரம் தரும் பகவதி அம்மன்!

Web Desk by Web Desk
May 19, 2024, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி கோயிலில் வீற்றிருக்கும் அம்மன், குமரி அம்மன், பகவதி அம்மன், பகவதி தேவி என்று அழைக்கப்படுகிறாள். இந்த அம்மை ஏன் கன்னியாகுமரி என்று அழைக்கப்படுகிறாள் ? இந்த கடற்கரையில் உள்ள மணல் வண்ணங்களாக மிளிர்வது ஏன்?என்பது பற்றி இப்போது பார்க்கலாம் .

பகவதி எழுந்தருளி இருக்கும் இந்த திருக்கோயில், இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ளது. கிழக்குப் பகுதியில் வங்காள விரிகுடாவும், மேற்குப் பகுதியில் அரபிக் கடலும், தெற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள இக்கோயில், பராசக்தியின் சக்தி பீடங்களில் ஒன்றாக புகழுடன் விளங்குகிறது. சக்தியின் முதுகு தண்டு விழுந்த இடம் இது என்று கூறுகிறது தலபுராணம்.

நாகர் கோவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இத்திருத்தலம் சக்தி தலங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

பாணாசுரன் என்னும் அசுரன் பிரம்மாவை நோக்கி தவமிருந்து , ஒரு கன்னிப் பெண்ணைத் தவிர வேறு யாராலும் தன்னை அழிக்க முடியாது என்னும் வரத்தைப் பெற்றான்.
மென்மையும் உடலும் மனதும் உடைய கன்னிப் பெண் தன்னை அழிக்க முடியாது என்ற எண்ணத்தில் இப்படி ஒரு வரத்தை வாங்கிய பாணாசுரன், முனிவர்கள், தேவர்கள், என அனைவருக்கும் கொடுமை செய்து வந்தான்.

எல்லோரும் இறைவனிடம் சென்று முறையிட்டனர். பிறகு பாணாசுரன் வாங்கிய வரத்தைப் பற்றி தெரிந்து கொண்ட தேவர்களும் முனிவர்களும் சக்தியை நோக்கித் தவமிருந்தனர்.

பாணாசுரனிடம் இருந்து தேவர்களையும் முனிவர்களையும் காப்பாற்ற அம்மை, கன்னிப் பெண்ணாக குமரியில் அவதரித்து ,ஈசனை மணம் முடிக்க தவமிருந்தாள்.

அதே சமயம் சுசீந்திரத்தில் தாணுமாலயனாக இருந்துவந்த ஈசன் அம்மையை திருமணம் செய்ய முடிவு செய்தார்.

திருமண பேச்சு வந்தது .திருமணம் நடந்துவிட்டால், பாணாசுர வதம் நடைபெறாமல் போய் விடுமே என்று எண்ணி நாரதர் ஒரு கோரிக்கை வைத்தார்.

அதாவது சூரிய உதயத்துக்கு ஒரு நாழிகைக்கு முன்னதாகவே மாப்பிள்ளை திருமணத்துக்கு வந்து விட வேண்டும் அப்படி வரவில்லை என்றால் திருமணம் நின்று விடும் என்றும் கூறப்பட்டது.

திருமண நாளன்று , சிவனும் குமரிக்குப் புறப்பட்டார். சூரிய உதயத்துக்கு முன்பே நாரதர் சேவலாக உருவெடுத்து கூவினார். சூரியன் உதித்து விட்டான் என்று சிவபெருமான் சுசீந்திரத்துக்கே திரும்பி விட்டார்.

சிவன் வரவில்லை என்றதும் குமரியில் திருமணத்துக்கு காத்திருந்த அம்மைக்கு கோபம் உச்சத்துக்கு சென்றது. திருமணத்துக்கான ஏற்பாடு செய்து வைத்திருந்த உண்வுகளையும்,பூக்களையும் கடல் மணல் பரப்பில் வீசினாள்.

]அதனால் தான் இன்றும் இங்குள்ள கடல் மணல் வண்ணங்களாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

கன்னிக் குமரியின் அழகில் மயங்கி பாணாசுரன் தேவியை மணக்க வந்த போது , வானளாவிய வடிவம் எடுத்த சக்தி, பாணாசுரனை தன் கால்களால் மிதித்து வதம் செய்தாள்.

ஒரு புரட்டாசி மாதம் அமாவாசை தொடங்கி 9 நாட்கள் விரதமிருந்து விஜய தசமி நாளில் பாணாசுரனை வதம் செய்தாள் என்று சொல்லுகிறார்கள்.

தேவர்கள், முனிவர்கள் பூக்கள் தூவி அம்மைக்கு நன்றி தெரிவித்தனர். இது தான் கன்னியா குமரி பகவதி அம்மன் திருக்கோயிலின் தலவரலாறு.

பாணாசுரனை அழித்த அம்மை ,இங்கே இந்த கோயிலில் கையில் ஜெப மாலையுடன் மின்னும் மூக்குத்தியுடன் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு இன்றும் அருள் வழங்கி கொண்டிருக்கிறாள்.

திருமண நடைபெறாமல் தாமதமாகும் கன்னிப் பெண்கள், இக்கோயிலுக்கு வந்து பகவதியை வணங்கி வழிபட்டு சென்றால் , விரைவில் திருமணம் நடைபெறும் என்று சொல்லுகிறார்கள் பக்தர்கள்.

காசிக்கு தல யாத்திரை செல்லும் முன், இக்கோயிலுக்கு வந்து பகவதி அம்மனை வழிபட்டு, இங்கிருந்து தீர்த்தம் மணல் எடுத்துக்கொண்டு காசி விஸ்வ நாதரை வணங்கி மீண்டும் இங்கே வந்து அம்மையை வழிபடுவது வழக்கமாக இருக்கிறது என்றும் சொல்லுகிறார்கள்.

Tags: Goddess Bhagwati who gives blessings to virgins!
ShareTweetSendShare
Previous Post

நீரிழிவு அபாய அறிகுறி ஆய்வில் கண்டுபிடிப்பு!

Next Post

இந்தியாவில் 60 லட்சம் மரங்கள் மாயம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Related News

பேச்சுவார்ததை தோல்வி அடைந்தால் ஆப்கனுக்கு எதிராக வெளிப்படையான போரை நடத்துவோம் – பாகிஸ்தான் மிரட்டல்!

போட்டோ ஷூட் நடத்துதில் கவனம் செலுத்தும் முதல்வர் ஸ்டாலின் – அர்ஜூன் சம்பத் விமர்சனம்!

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா மறைவு – பிரதமர் இரங்கல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

வேலூர் தங்க கோயிலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்!

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies