நீரிழிவு அபாய அறிகுறி ஆய்வில் கண்டுபிடிப்பு!
Jul 29, 2026, 09:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீரிழிவு அபாய அறிகுறி ஆய்வில் கண்டுபிடிப்பு!

Murugesan M by Murugesan M
May 18, 2024, 09:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குளுக்கோஸ் குடித்து ஒரு மணி நேரத்திற்குப் பின் ரத்தப் பரிசோதனை செய்வது நீரிழிவு நோயின் அபாய அறிகுறிகளைச் சரியான முறையில் கண்டுபிடிக்க உதவுகிறது என்று இந்தியாவில் சர்க்கரை நோய் பற்றிய ஆய்வுக்கான ஆராய்ச்சி சங்கம் தெரிவித்துள்ளது.
அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியாவில் 1972ம் ஆண்டு தொடங்கப்பட்ட சர்க்கரை நோய் பற்றிய ஆய்வுக்கான ஆராய்ச்சி சங்கம், இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளுடன் நீரழிவு நோய் பற்றியும் நோய் பரிசோதனை முறைகள், நோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்தும் ஆய்வுகள் செய்து வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, 101 மில்லியன் மக்கள் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் 136 மில்லியன் இந்திய மக்கள் ப்ரீ டையாபிட்டீஸ் எனப்படும் நோயின் ஆரம்ப நிலை பாதிப்பில் இருக்கிறார்கள்.

இந்நிலையில், அண்மையில் சர்க்கரை நோய் கண்டறியும் ரத்த பரிசோதனையில் புது முறையைக் கண்டுபிடித்த இந்த சங்கம், வளரும் நாடுகளில் உள்ள நீரழிவு நோய் பற்றிய சர்வதேச மருத்துவ இதழில் , இந்த பரிசோதனையின் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதாவது, (155mg/dL) ஐ 155 மில்லிகிராமை விட அதிகமாக சர்க்கரை அளவுள்ள நபர்களிடம், குளுக்கோஸ் குடித்து ஒரு மணி நேரத்திற்குப் பின் எடுக்கப் பட்ட இரத்த பரிசோதனையின் முடிவுகள், அந்த நபர் ‘PRE DIABETIS” என்ற நிலையில் இருந்து முழு சர்க்கரை நோயாளியாக விரைவில் மாறுவார் என்பதை மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது.

சாப்பாட்டுக்கு முன் மற்றும் சாப்பாட்டுக்கு பின் இரண்டு மணிநேரம் கழித்து எடுக்கும் பரிசோதனைகளில், ரத்தத்தின் குளுக்கோஸ் அளவு சாதாரணமாக இருக்கும் மக்களுக்கு இந்த புதிய ஒரு மணி நேர பரிசோதனையை இந்தியாவில் நீரிழிவு ஆய்வுக்கான ஆராய்ச்சி சங்கம் பரிந்துரை செய்துள்ளது.

ரத்தத்தின் குளுக்கோஸ் அளவுகளை ஆரம்பநிலைகளில் கண்டறிவது நீரழிவு நோயைத் தடுக்கவும், சிகிச்சை முறைகளை நோயின் தன்மைக்கு ஏற்ப சீரமைக்கவும் உதவும் என்று , இந்திய நீரிழிவு ஆய்வுக்கான ஆராய்ச்சி சங்கத்தின் தலைவர் ராகேஷ் சஹே கூறியிருக்கிறார்.

நீரழிவு நோயைத் தொடக்கத்திலேயே கண்டறிவது தான் மிகச் சிறப்பான முதன்மையான தடுப்பு முறை என்றும், ஆரம்பக் காலங்களில் நோயைக் கண்டறிவதால் , உணவு மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமாக சர்க்கரை நோயை எளிதாக குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சர்க்கரை நோய்க்கான ரத்த பரிசோதனைகள் உணவுக்கு முன் மற்றும் உணவுக்குப் பின் என்று எடுக்கப்படும் நிலையில், இப்போது இந்த புதிய பரிசோதனை என்பது, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதை எளிதாக்கும் என்றும், பீட்டா செல் செயல்பாடுகளின் இழப்புக்கள் வேகமாக நிகழ்வதால் இன்சுலின் சுரப்பதும் அதிகமாகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய நீரிழிவு ஆய்வுக்கான ஆராய்ச்சி சங்கத்தின் இந்த புதிய பரிந்துரைகள் இந்தியாவிலும் , உலகின் பிற நாடுகளிலும் பலரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் உருவானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில், 30 000 பேர்களிடம் நடத்தப் பட்ட இந்த ஆய்வுகளில் சாதாரண குளுக்கோஸ்மற்றும் இரண்டு மணிநேர குளுக்கோஸ் பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 12 சதவீத பேர் நீரழிவு நோய்க்கு இருந்தது 6 ஆண்டுகளுக்குள் அவர்களில் 32.6 சதவீதம் பேர் சர்க்கரை நோய் ஏற்பட்டது.

இந்த புதிய ஒருமணி நேர பரிசோதனை செய்யப்பட்டதில், 19 சதவீதம் பேர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 52 சதவீதம் பேர் ‘ப்ரீடியாபயாட்டீஸ்’ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

(155mg/dL) சர்க்கரை அளவு 144மில்லிகிராம் முதல் 155 மில்லிகிராம் வரை இருந்த குழுவில் பரிசோதனை நடத்தப்பட்டதில், 10 சதவீத பேருக்கும் , அதை விட குறைந்த அளவு உள்ளவர்களில் நடத்திய சோதனையில் 6 சதவீத பேருக்கும் நீரழிவு நோய் ஏற்பட்டதாக , இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவைப் பொறுத்தவரை இந்த ஆய்வின் பரிந்துரைகள் மிக முக்கியமானதாகும். இப்போது இல்லையெனில் எப்போதும் இல்லை என்பது சர்க்கரை நோய்க்கு கிடையாது. வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள், உணவு முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற காரணங்களால் திடீரென நீரழிவு நோய் வரலாம்.

எனவே , இந்திய நீரிழிவு ஆய்வுக்கான ஆராய்ச்சி சங்கத்தின் இந்த ஆய்வின் பரிந்துரைகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

Tags: Discovery of diabetes risk symptom study!
ShareTweetSendShare
Previous Post

ஷெங்கன் நாடுகளுக்கு படையெடுக்கும் இந்தியர்கள்!

Next Post

கன்னிப் பெண்களுக்கு வரம் தரும் பகவதி அம்மன்!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies