வாக்கு வங்கி அரசியலுக்காக தேச பாதுகாப்புடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமரசம் செய்து கொண்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் சட்டவிரோதமாக ஊடுருவிய நபர்களுக்கு மம்தா பானர்ஜி அடையாள அட்டை, ரேஷன் கார்டு வழங்கி அவர்களை வாக்காளர்களாக மாற்றியதாக கூறினார்.
மேற்கு வங்கத்தில் நிலவும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பான கேள்விக்கு நட்டா பதிலளிக்கையில், சட்டம்- ஒழுங்கு மாநில அரசு சார்ந்த விவகாரம் என்றும், இதில் மத்திய அரசு உதவினாலும், மம்தா பானர்ஜியின் நோக்கம் தெளிவாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சந்தேஷ்காளி விவகாரத்தில் மம்தா பானர்ஜி தொடக்கத்தில் மெளனம் சாதித்தது ஏன் என்றும் ஜெ.பி. நட்டா கேள்வி எழுப்பினார்.