IAF அசத்தல் சாதனை பாராசூட் மூலம் தரையிறக்கப்பட்ட மருத்துவமனை!
Jul 26, 2025, 07:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

IAF அசத்தல் சாதனை பாராசூட் மூலம் தரையிறக்கப்பட்ட மருத்துவமனை!

Web Desk by Web Desk
May 20, 2024, 08:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகிலேயே முதல்முறையாக, இந்திய விமானப் படை, சுமார் 200 பேருக்குச் சிகிச்சை அளிக்கக் கூடிய, ஒரு சிறிய மருத்துவமனையை, போர் விமானத்தில் எடுத்து சென்று, பாராசூட் மூலம், பத்திரமாக தரையிறக்கி சாதனை படைத்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியாவில், பல இடங்களில் அதிக வெள்ளம், நிலநடுக்கம், போன்ற இயற்கை பேரிடர் காரணமாக பெரும் ஆபத்து ஏற்படும் வேளையில், பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி மற்றும் தேவையான மருத்துவச் சிகிச்சை அழைப்பது, சவாலாகவே உள்ளது.

இதற்கு தீர்வு காணும் வகையில் , இந்திய விமானப்படை, எங்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் எடுத்து செல்லக் கூடிய, தற்காலிக மருத்துவமனையை, உலகிலேயே முதல்முறையாக இந்தியா உருவாக்கியுள்ளது.

இந்த சிறிய மருத்துவமனை, எந்த நேரத்திலும், எந்த அவசரநிலையையும் எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள இந்திய விமானப்படை, ஆக்ராவில் உள்ள மால்புரா மண்டலத்தில் இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

ஆக்ராவை தளமாகக் கொண்ட இந்திய விமானப்படையின் ஏர் டெலிவரி ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் எஸ்டாப்ளிஷ்மென்ட் (ADRDE) அமைப்பு, இதற்காக பிரத்யேகமான பாராசூட்களை உருவாக்கி வடிவமைத்திருக்கிறது.

இரண்டு பாராசூட்களால் ஆன , 720 கிலோ எடை கொண்ட இந்த சிறிய மருத்துவமனையை, 1,500 அடி உயரத்தில் இருந்து இந்திய விமானப் படை தரையிறக்கியது.

தரையிறங்கிய 12 நிமிடங்களில் செயல்படத் தொடங்கிய இந்த சிறிய மருத்துவமனை கனசதுர வடிவிலானது. ஒரே நேரத்தில் 200 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் திறன் கொண்டதாக இந்த மருத்துவமனைஉருவாக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி குண்டுகள், தீக்காயங்கள், எலும்பு முறிவுகள் மற்றும் பெரிய ரத்தப்போக்கு போன்ற பல்வேறு படுகாயங்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான மேம்பட்ட மருத்துவ வசதிகளும் இந்த சிறிய மருத்துவமனையில் உள்ளன.

சிறியதான அறுவை சிகிச்சை செய்யும் வசதிகளுடன் கூடிய இந்த சிறிய மருத்துவமனையில், Xray கருவி முதற்கொண்டு, உடனடி சிகிச்சை அளிக்க தேவையான எல்லா வசதிகள் உள்ளன.

மேலும் ட்ரோன் மூலம் மருந்துகள், இரத்தம் முதலான தேவையானவற்றைக் கொண்டு செல்லும் வகையில், இந்த மருத்துவமனையை GPRS மூலம் அருகில் உள்ள கட்டுபாட்டு அறையுடன் தொடர்பு கொள்ளவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

இவை அனைத்தும் இதில் வைக்கப்பட்டாலும், ஆடாமல் அசையாமல் இருக்கும் வகையில், மிக நேர்த்தியாக இந்த சிறிய மருத்துவமனை வடிவமைக்கப் பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், BHISHM (Bharat Health Initiative for Sahyog, Hita and Maitr) என்ற பெயரில் பீஷ்மா திட்டம், போர்க் கள சுகாதார தகவல் அமைப்பால் உருவாக்கப்பட்டது .

தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் அமைத்த தனிக்குழு இந்தப்பணியில் தீவிரமாக செயல்பட்டது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி ‘ஆரோக்ய மைத்ரி’ திட்டத்தை அறிவித்தார். அறிவித்து ஓராண்டுக்குள், இந்திய விமானப்படை பீஷ்மா திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி காட்டி இருக்கிறது.

முதல் முறையாக அயோத்தி இராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது, சுமார் 80 இடங்களில் இவை வைக்கப்பட்டன. தற்போது இதனை சோதனையாக விமானம் மூலம், குறிப்பிட்ட இடத்தில், பாராசூட்கள் மூலம் தரையிறக்கப் பட்டு சோதிக்கப்பட்டது.

இதன் கீழ் இயற்கை பேரழிவுகள் அல்லது மனிதாபிமான நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட எந்தவொரு வளரும் நாட்டிற்கும் இந்தியா மருத்துவ பொருட்கள் உட்பட அத்தியாவசிய தேவைகளையும் உடனடி மருத்துவ சேவைகளையும் வழங்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

சிறிய மருத்துவமனையில், எந்தப் பொருட்களும் ஒரு சேதம் அடையாமல், குறிப்பிட்ட இடத்தில் இறக்கி, இந்தியா புரிந்த பெரும் சாதனையை உலகமே ஆச்ச்சரியமாக பார்க்கிறது.

Tags: INDIAN AIRFOCEIAF Parachute Landed Hospitalindian army
ShareTweetSendShare
Previous Post

சுகபோக வாழ்வு தரும் திருவாடானை கோயில்!

Next Post

மகாராஷ்டிராவில் உள்ள 13 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies