IAF அசத்தல் சாதனை பாராசூட் மூலம் தரையிறக்கப்பட்ட மருத்துவமனை!
Sep 17, 2026, 03:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

IAF அசத்தல் சாதனை பாராசூட் மூலம் தரையிறக்கப்பட்ட மருத்துவமனை!

Murugesan M by Murugesan M
May 20, 2024, 08:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகிலேயே முதல்முறையாக, இந்திய விமானப் படை, சுமார் 200 பேருக்குச் சிகிச்சை அளிக்கக் கூடிய, ஒரு சிறிய மருத்துவமனையை, போர் விமானத்தில் எடுத்து சென்று, பாராசூட் மூலம், பத்திரமாக தரையிறக்கி சாதனை படைத்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியாவில், பல இடங்களில் அதிக வெள்ளம், நிலநடுக்கம், போன்ற இயற்கை பேரிடர் காரணமாக பெரும் ஆபத்து ஏற்படும் வேளையில், பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி மற்றும் தேவையான மருத்துவச் சிகிச்சை அழைப்பது, சவாலாகவே உள்ளது.

இதற்கு தீர்வு காணும் வகையில் , இந்திய விமானப்படை, எங்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் எடுத்து செல்லக் கூடிய, தற்காலிக மருத்துவமனையை, உலகிலேயே முதல்முறையாக இந்தியா உருவாக்கியுள்ளது.

இந்த சிறிய மருத்துவமனை, எந்த நேரத்திலும், எந்த அவசரநிலையையும் எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள இந்திய விமானப்படை, ஆக்ராவில் உள்ள மால்புரா மண்டலத்தில் இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

ஆக்ராவை தளமாகக் கொண்ட இந்திய விமானப்படையின் ஏர் டெலிவரி ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் எஸ்டாப்ளிஷ்மென்ட் (ADRDE) அமைப்பு, இதற்காக பிரத்யேகமான பாராசூட்களை உருவாக்கி வடிவமைத்திருக்கிறது.

இரண்டு பாராசூட்களால் ஆன , 720 கிலோ எடை கொண்ட இந்த சிறிய மருத்துவமனையை, 1,500 அடி உயரத்தில் இருந்து இந்திய விமானப் படை தரையிறக்கியது.

தரையிறங்கிய 12 நிமிடங்களில் செயல்படத் தொடங்கிய இந்த சிறிய மருத்துவமனை கனசதுர வடிவிலானது. ஒரே நேரத்தில் 200 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் திறன் கொண்டதாக இந்த மருத்துவமனைஉருவாக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி குண்டுகள், தீக்காயங்கள், எலும்பு முறிவுகள் மற்றும் பெரிய ரத்தப்போக்கு போன்ற பல்வேறு படுகாயங்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான மேம்பட்ட மருத்துவ வசதிகளும் இந்த சிறிய மருத்துவமனையில் உள்ளன.

சிறியதான அறுவை சிகிச்சை செய்யும் வசதிகளுடன் கூடிய இந்த சிறிய மருத்துவமனையில், Xray கருவி முதற்கொண்டு, உடனடி சிகிச்சை அளிக்க தேவையான எல்லா வசதிகள் உள்ளன.

மேலும் ட்ரோன் மூலம் மருந்துகள், இரத்தம் முதலான தேவையானவற்றைக் கொண்டு செல்லும் வகையில், இந்த மருத்துவமனையை GPRS மூலம் அருகில் உள்ள கட்டுபாட்டு அறையுடன் தொடர்பு கொள்ளவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

இவை அனைத்தும் இதில் வைக்கப்பட்டாலும், ஆடாமல் அசையாமல் இருக்கும் வகையில், மிக நேர்த்தியாக இந்த சிறிய மருத்துவமனை வடிவமைக்கப் பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், BHISHM (Bharat Health Initiative for Sahyog, Hita and Maitr) என்ற பெயரில் பீஷ்மா திட்டம், போர்க் கள சுகாதார தகவல் அமைப்பால் உருவாக்கப்பட்டது .

தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் அமைத்த தனிக்குழு இந்தப்பணியில் தீவிரமாக செயல்பட்டது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி ‘ஆரோக்ய மைத்ரி’ திட்டத்தை அறிவித்தார். அறிவித்து ஓராண்டுக்குள், இந்திய விமானப்படை பீஷ்மா திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி காட்டி இருக்கிறது.

முதல் முறையாக அயோத்தி இராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது, சுமார் 80 இடங்களில் இவை வைக்கப்பட்டன. தற்போது இதனை சோதனையாக விமானம் மூலம், குறிப்பிட்ட இடத்தில், பாராசூட்கள் மூலம் தரையிறக்கப் பட்டு சோதிக்கப்பட்டது.

இதன் கீழ் இயற்கை பேரழிவுகள் அல்லது மனிதாபிமான நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட எந்தவொரு வளரும் நாட்டிற்கும் இந்தியா மருத்துவ பொருட்கள் உட்பட அத்தியாவசிய தேவைகளையும் உடனடி மருத்துவ சேவைகளையும் வழங்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

சிறிய மருத்துவமனையில், எந்தப் பொருட்களும் ஒரு சேதம் அடையாமல், குறிப்பிட்ட இடத்தில் இறக்கி, இந்தியா புரிந்த பெரும் சாதனையை உலகமே ஆச்ச்சரியமாக பார்க்கிறது.

Tags: indian armyINDIAN AIRFOCEIAF Parachute Landed Hospital
Share
Tweet
SendShare
Previous Post

சுகபோக வாழ்வு தரும் திருவாடானை கோயில்!

Next Post

மகாராஷ்டிராவில் உள்ள 13 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு!

Related News

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies