5-ம் கட்ட மக்களவை தேர்தலில் 60 புள்ளி பூஜ்யம் ஒன்பது சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில், 5-ம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. 5-ம் கட்ட மக்களவை தேர்தலில் 60 புள்ளி பூஜ்யம் ஒன்பது சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 74 புள்ளி ஆறு ஐந்து சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிராவில் 54 புள்ளி இரண்டு ஒன்பது சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.