ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அடுத்த அதிபரை தேர்வு செய்வற்கான தேர்தல் ஜூன் 28ஆம் தேதி நடைபெறும் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது ஈரான் துணை அதிபர் முகமது மொக்பர், அதிபருக்கான கடமைகளை ஆற்றி வருகிறார்.
ஈரான் அரசியல் சாசன சட்டத்தின்படி, அதிபர் இறந்துவிட்டால் அடுத்த 50 நாள்களுக்குள் அடுத்த அதிபர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
அந்த வகையில், ஜூன் 28ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.