சட்டவிரோதமாக ஆம் ஆத்மி கட்சி பணம் பெற்றது தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி உள்துறை அமைச்சகத்துக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.
ஆம் ஆத்மி முன்னாள் எம்.எல்.ஏ- வான சுக்பால் சிங் கைராவிடம் நிதி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த 2021- ஆம் ஆண்டு விசாரணை நடத்தியது.
அப்போது சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து ஆம் ஆத்மி கட்சி 7 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் பெற்றிருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு உள்துறை அமைச்சகத்துக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.