78 வயது மூதாட்டி வீட்டிலிருந்து வாக்களிக்க அனுமதியளிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
உடல்நலக் குறைவால் படுத்த படுக்கையாக இருப்பதால், மக்களவைத் தேர்தலில் தம்மை வீட்டிலிருந்து வாக்களிக்க அனுமதிக்கக் கோரி, சத்தீஸ்கரை சேர்ந்த சரளா என்ற 78 வயது மூதாட்டி உச்சநீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்குள், சத்தீஸ்கரில் மே 7-ஆம் தேதியே வாக்குப்பதிவு நிறைவடைந்து விட்டதால், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் பெலா எம். திரிவேதி மற்றும் பங்கஜ் மிட்டல் ஆகியோர் அடங்கிய விடுமுறைகால அமர்வு உத்தரவிட்டது.