ராகுல் காந்தியை ரேபரேலி மீது சோனியா காந்தி திணிப்பதாக முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுஹான் விமர்சித்தார்.
தெற்கு டெல்லியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ராகுல் காந்தியை ரேபரேலி மக்களிடம் ஒப்படைப்பதாக சோனியா காந்தி அண்மையில் பேசியதை நினைவுகூர்ந்து, இந்த விமர்சனத்தை முன்வைத்தார். மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பிரதமர் மோடி கண்டிப்பாக மீட்டெடுப்பார் என்றும் சிவராஜ்சிங் சவுஹான் நம்பிக்கை தெரிவித்தார்.