நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64-வது பழ கண்காட்சி தொடங்கியுள்ளது. இதில், 2 ஆயிரம் கிலோ திராட்சைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கிங்காங் வடிவத்தை சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.
கோடை சீசனை ஒட்டி, நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் மற்றும் பழக் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான பழக்கண்காட்சி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியில் குழந்தைகளைக் கவரும் வகையில், 15 அடி உயரம், 6 அடி அகலத்தில் 2 ஆயிரம் கிலோ திராட்சைப் பழங்களைக் கொண்டு பிரம்மாண்ட கிங்காங் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தப் பழக்கண்காட்சி, வழக்கமாக 2 நாட்கள் நடைபெறும் நிலையில், இம்முறை முதன்முறையாக 3 நாட்கள் நடைபெறவுள்ளது.