தேர்தல் நடைமுறையில் குறுக்கிட முடியாது என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குப் பதிவு வீதம் அடங்கிய ஃபார்ம் 17சி- விவரத்தை தேர்தல் ஆணைய அதிகாரபூர்வ இணையதளத்தில் 48 மணிநேரத்தில் பதிவேற்றம் செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, தேர்தல் நடைமுறையில் தாங்கள் குறுக்கிட இயலாது என்று கூறி, அடுத்தகட்ட விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.