கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் வைகாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.
11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், ஒவ்வொரு நாளும் பூஞ்சப்பர வாகனம், அன்ன வாகனம், கருட வாகனம், வெள்ளை குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறவுள்ளது.
வைகாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஜூன் 3-ஆம் தேதி நடைபெறுகிறது.