தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அழகர் சாமிபுறத்தைச் சேர்ந்தவர் கண்ணதாசன், இவர் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட புகார்கள் உள்ள நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கரன்குமார் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கண்ணதாசன் கரன்குமாரை கொலை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது புகழேந்தி, அழகர், லிங்கேஸ்வரன், சார்லி ஆகியோர் கண்ணதாசனை மடக்கி பிடித்து கத்தியால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கரன்குமார் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.