நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே கீழே விழுந்தவர்களுக்கு உதவ முயன்ற காவலர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த விஜயன் மற்றும் அவரது சகோதரனும், இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்துள்ளனர்.
அவர்களை காப்பற்ற முயன்ற காவலர்களை போதையில் இருந்த இருவரும் கடுமையாக தாக்கியுள்ளனர். காவலர்களை மதுபோதையில் இருவர் தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.