கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி கோச்சின் மேற்கூரை சேதமடைந்து மழைநீர் உள்ளே புகுந்ததால் பயணிகள் அவதியடைந்தனர்.
சென்னையில் இருந்து குமரிக்கு தினமும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் இருந்து நேற்று புறப்பட்ட ரயிலின் ஏசி கோச்சில் ஒரு சில பயணிகள் பயணித்தனர்.
அப்போது ரயிலின் மேற்கூரை சேதமடைந்ததால் மழைநீர் உள்ளே வடியத் தொடங்கியது.
இதனால் இருக்கையில் அமர முடியாமல அவதியடைந்த பயணிகள் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.