தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்ய முயன்றபோது வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
குரும்பூர்- குழைக்கநாதபுரம் பகுதியை சேர்ந்த ஜீவரத்தினம், பிரதீப் குமார், பூபதிராஜா ஆகிய 3 பேரும் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பதிவிட தங்களுடைய இருசக்கர வாகனத்தில் சாகசம் மேற்கொண்டனர்.
அப்போது 2 வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஜீவரத்தினம்ம, பிரதீப்குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பூபதிரஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.