6-ம் கட்ட மக்களவை தேர்தலை ஒட்டி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோர் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
6-ம் கட்ட மக்களவை தேர்தலில், டெல்லியிலுள்ள 7 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனை ஒட்டி, டெல்லியிலுள்ள வாக்குச்சாவடியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.
இதேபோன்று, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் டெல்லியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவி சுதேஷ் தன்கருடன் வந்து வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், வாக்களிப்பது என்பது பொறுப்பும், அதிகாரமும் இணைந்தது எனக் குறிப்பிட்டார்.