மேற்கு வங்காளத்தில் ராமகிருஷ்ணா மிஷன் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் பாரத் சேவாஷ்ரம் சங்கம் இரண்டும் இந்தியாவின் மதிப்புமிக்க மத மற்றும் ஆன்மீக நிறுவனங்கள் என தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இண்டியா கூட்டணியின் சனாதன தர்ம எதிர்ப்பை வெளிக்காட்டுவதாக கூறினார்.
ராவணன் காலத்தில் முனிவர்கள் அச்சுறுத்தப்பட்டது போல் தற்போது ஒரு நிலையை உருவாக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.
இதற்கு பொதுமக்கள் தக்க பதிலடி தர வேண்டும் என்றும் யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டார்.