உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் ஐந்தாண்டு கால ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்துவிட்டதால், அதிபராக நீடிக்கும் தார்மீக அந்தஸ்தை அவர் இழந்துவிட்டதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் 2 ஆண்டுகளைக் கடந்து நீடிக்கும் நிலையில், போர் நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவிப்பதாக புதின் கூறியிருந்தார்.
இந்த நிலையில், கடந்த மே 20-ஆம் தேதியுடன் ஜெலென்ஸ்கியின் பதவிக்காலம் நிறைவடைந்ததை சுட்டிக்காட்டிய புதின், இதற்கு மேல் இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தினால், அது சட்டப்படி செல்லுபடியாகுமா என புதின் கேள்வி எழுப்பியுள்ளார்.