தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே செல்ஃபோன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
பெருமாக்கநல்லூரைச் சேர்ந்தவர் விவசாயி லட்சுமணன், வேறொரு நபரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நிலத்தை தன்னிடமே விற்பனை செய்ய வேண்டும் என நிலஉரிமையாளரிடம் முன் பணமாக 13 லட்ச ரூபாயை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் நிலம் வேறொரு நபருக்கு விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், லட்சுமணன் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் லட்சுமணனை சமாதானப்படுத்தி கீழே இறக்கினர்.