காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில், வடகலை – தென்கலை பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை ஒட்டி, வரதர் கங்கைகொண்டான் மண்டபத்தில் எழுந்தருளினார்.
அப்போது, வேத மந்திரங்களை பாடுவதில், வடகலை பிரிவினருக்கும் – தென்கலை பிரிவினரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து, கோயிலில் இருந்து கிளம்பிய வரதர், 12 வீதிகள் வழியாக பேருந்து நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, மீண்டும் இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் பொதுமக்கள் முன்னிலையிலேயே கடுமையாக வாக்குவாதம் செய்தனர்.
இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.