சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தார்கள் சுமார் 2 அரை லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் வாழைத்தார் ஏலம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் வாழைத்தார்களை கொண்டு வந்தனர்.
இதில் மொத்தமாக ஆயிரத்து 56 வாழைத்தார்கள் 2 லட்சத்து 46 ஆயிரத்து 356 ரூபாய்க்கு விற்பனையானது. இதனை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.