சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் இந்திய விண்வெளி வீரர்களை அனுப்பும் வகையில், அவர்களுக்கு நாசாவில் பயிற்சியளிக்கப்படும் என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்ஷெட்டி தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் இஸ்ரோ சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இருநாட்டு விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி மையத்துக்குச் செல்வர் என்று குறிப்பிட்டார்.
புவியின் மேற்பரப்பு, இயற்கை இடர்பாடுகள், கடல் மட்ட அதிகரிப்பு ஆகியவற்றை கண்காணிப்பதற்கான நிசார் செயற்கைகோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விரைவில் விண்ணுக்கு அனுப்பப்படும் என்றும் எரிக் கார்ஷெட்டி கூறியுள்ளார்.