பெரம்பலூர் அருகே 47 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
எசனை கிராமத்தை சேர்ந்தவர் சுஜாதா இவர், சாந்தி என்பவரிடம் தனது வீட்டை விற்கவுள்ளதாக கூறி 46 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.
பின்னர் சுஜாதா வீட்டை சாந்தியின் பெயருக்கு மாற்றி தராமல் இருந்துள்ளார். இது குறித்து கேட்ட போது சுஜாதா மற்றும் குடும்பத்தினர், சாந்திக்கு கொலை மிரட்டல் விடுத்தாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சாந்தி அளித்த புகாரின் பேரில் சுஜாதாவை கைது செய்த போலீசார் மேலும் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.