நாக்பூரில் கார் மோதி 3 வயது குழந்தை உள்ட மூன்று பேர் காயமடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் கோத்வாலி செண்டா சவுக் பகுதியில் கார் ஒன்று தறிகெட்டு ஓடி விபத்தை ஏற்படுத்தியதில், மூன்று பேர் காயமடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள், காரை உடைத்து சூறையாடியது மட்டுமன்றி, ஓட்டுநரை பிடித்து சரமாரியாக தாக்கினர்.
அவர்களிடம் இருந்து ஓட்டுநரை மீட்ட போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.