ராமேஸ்வரம் அருகே தடையை மீறி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாட்டுப் படகு சூறைக்காற்று காரணமாக கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்தனர்.
இந்நிலையில் தடையை மீறி பாம்பனில் இருந்து கடலுக்குச் சென்ற நாட்டுப்படகு சூறைக்காற்று வீசியதில் நடுக்கடலில் கவிழ்ந்தது.
இதனையடுத்து கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 5 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.