ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாந்தோப்பிற்குள் புகுந்து காட்டு யானைகள் மாமரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, புலி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில், அத்திக்கோயில் பகுதியில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புகுந்த யானைகள், மாங்காய்களை சாப்பிட்டும், மா மரங்களை வேரோடு பிடுங்கியும் பெரும் அட்டகாசம் செய்துள்ளன.