தமிழகத்தின் நெல் கொள்முதல் 2023-24ஆம் ஆண்டில் 17 லட்சம் டன் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 2022-23 ஆம் ஆண்டில், சுமார் 44.26 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
இதேபோல் 2023-24ஆம் ஆண்டில் சுமார் 27.74 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
அதாவது கடந்த ஆண்டை விட 16 புள்ளி 52 டன் நெல் கொள்முதல் குறைந்துள்ளது. சம்பா பருவத்தில் நீர் இருப்பு இல்லாததால் சாகுபடி பரப்பளவு சரிந்ததே நெல் கொள்முதல் குறைவுக்கு காரணம் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அரசு கொள்முதல் நிறுவனமான தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனுக்கு பதிலாக தனியார் வியாபாரிகளிடம் விற்றதால் கொள்முதல் குறைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.