“வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை கைது செய்ய வேண்டும்” என பாதிக்கப்பட்டவர்கள் மதுரை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தனர்.
மதுரை மாவட்டம் மேலூரைசேர்ந்த அறிவு மூசா, பிரசாத் மற்றும் கேரளாவைச் சேர்ந்த அன்பு முபாரக் ஆகிய மூன்று பேர் மதுரை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அதில், “வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவமாக கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த திருநகர் சாஸ்தா ட்ராவல்ஸ் உரிமையாளர் விக்னேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தனர்.