கொரோனா தொற்றுக்குப் பின் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் குறைந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு முன் 71. 4 ஆக ஆண்டுகளாக இருந்த சராசரி ஆயுட்காலம், தற்போது ஒன்றரை ஆண்டுகள் குறைந்து 61.9 ஆண்டுகளாக குறைந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
அதிலும் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா பிராந்தியங்களில் சராசரி ஆயுட்காலம் 3 ஆண்டுகள் வரை குறைந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலக அளவில் கொரோனாவுக்கு 1 கோடியே 30 லட்சம் பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.