கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் இரண்டு ரவுடி கும்பல்களிடையே மோதல் ஏற்பட்டது.
உடுப்பி – மணிப்பால் தேசிய நெடுஞ்சாலையில் கார்களை கொண்டு இருதரப்பினர் மோதியும், கத்தியால் தாக்கியும் மோதலில் ஈடுபட்டனர். இதில் காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தத் தாக்குதல் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து உடுப்பி நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து ஆஷிக் மற்றும் ரகிப் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்களிடமிருந்து தலா இரண்டு கார்கள், இருசக்கர வாகனங்கள், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.