திருவள்ளூர் அடுத்த காக்களூரில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பண்ணையில், முறைகேட்டில் ஈடுபட்ட மூன்று பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் ஆவின் பால் பண்ணையில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக வாகனங்களில் ஆயிரத்து ஐநூறு லிட்டர் பால் கொண்டு சென்றதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, ஒரு ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான பால் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, பால் பண்ணை துணை மேலாளர் கனிஷா, உதவியாளர் முரளி, இடைநிலை அலுவலர் ராஜா உள்ளிட்ட மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.