பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 670 ஆக அதிகரித்துள்ளது.
தலைநகர் மொர்சிபியில் இருந்து தெற்குப் பசிபிக் பெருங்கடலில் 600 கிலோமீட்டருக்கு அப்பால் ஏங்கா மாகாணத்தில் உள்ள கவுகோளம் கிராமத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்ணிமைக்கும் நேரத்தில் பலியானதாக ஆஸ்திரேலிய ஊடகம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 670 ஆக அதிகரித்துள்ளதாகவும், 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதையுண்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.