தெற்கு கோவாவில் குடிசைக்குள் பேருந்து புகுந்து விபத்தை ஏற்படுத்தியதில், 4 பேர் உயிரிழந்தனர்.
வெர்னா பகுதியில் தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த குடிசைக்குள் புகுந்தது.
பேருந்து ஏறி இறங்கியதில் குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த பீகாரைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 4 பேர் காயமடைந்தனர். பேருந்து ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.