தைவான் எல்லையில் போர்ப் பயிற்சி மேற்கொள்வதை சீனா வழக்கமாக்கிவிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தைவான் தனிநாடாக இருந்தாலும், அதை தங்களது ஒருங்கிணைந்த பகுதியாகவே சீனா கருதுகிறது.
அதேசமயம், தைவான் இறையாண்மை மிக்க தேசம் என அதன் புதிய அதிபர் வில்லியம் லாய் அண்மையில் சூளுரைத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, தைவான் எல்லையில் இரு தினங்களாக விமானம், கப்பலை கொண்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டது. இதன் காரணமாக இந்த பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்ட நிலையில், போர்ப் பயிற்சியை சீனா வழக்கமாக்கிவிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.