வங்கதேச எம்.பி. கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி அமெரிக்கா தப்பியோடியதாக அந்நாட்டு புலனாய்வுப் பிரிவு தலைவர் ஹருண்-அர்- ரஷீத் தெரிவித்துள்ளார்.
வங்கதேச எம்.பி. அன்வருல் அசீம் கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரிப்பதற்காக கொல்கத்தா வந்த ஹருண்-அர்- ரஷீத், அன்வருல் அசீம் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான அக்தர் உஸ்மான் காத்மாண்டில் இருந்து துபாய் வழியாக அமெரிக்கா தப்பிச் சென்றதாகவும், இன்டர்போல் உதவியுடன் அவரை விரைவில் கைது செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.