சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தேய்பிறை சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு உற்சவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு கொலு மண்டபத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இன்று வார இறுதி விடுமுறை நாள் என்பதால், கோயிலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.