தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாட்டு கொட்டகையில் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் உயிரிழந்தார்.
திருச்செந்தூரைச் சேர்ந்த ராஜ மணிகண்டன், அப்பகுதியில் உள்ள மாட்டுக் கொட்டகையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்த ராஜ மணிகண்டனை மீட்ட நண்பர்கள், அவரை திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜ மணிகண்டன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.