சென்னையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா, நிதி ஒதுக்கீடு செய்து மோசடி செய்ததாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேற்கு மாம்பலம் பகுதியில் கட்டாத கட்டடத்தை கட்டியதாக கணக்கு காட்டி ரூ.17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மோசடி செய்ததாக, அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது புகார் அளிக்கப்பட்டது.
கடந்த 2016 – 2021ம் ஆண்டு காலகட்டத்தில் சத்யா அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்தபோது, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா, உதவி பொறியாளர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.