மத்தியப் பிரதேச மாநிலம் விஜயப்பூரில், புதிய பசுமை ஹைட்ரஜன் ஆலையை GAIL நிறுவனம் தொடங்கியுள்ளது.
231 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த ஆலை நிறுவப்பட்டுள்ளது. 2040-ம் ஆண்டுக்குள் பூஜ்யம் கார்பன் உமிழ்வை அடைய வேண்டும் என்ற இலக்கை எட்ட உதவும் வகையில் இந்த பசுமை ஹைட்ரஜன் ஆலை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆலை மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 4 டன் பசுமை ஹைட்ரஜன் தயாரிக்கப்படுமென GAIL நிறுவனம் கூறியுள்ளது.