ஈரோடு அருகே இளைஞரை கொலை செய்த நபரை கைது செய்யக்கோரி அரசு தலைமை மருத்துவமனையில் முன்பு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மலையம்பாளையம் அருகே முனியப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கட்டிட பொறியாளர் ஹரிஷ்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஏசி மெக்கானிக் வெள்ளியங்கிரி என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட சென்றபோது, மதுபோதையில் அங்கு வந்த வெள்ளயங்கிரி வேண்டுமென்று தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த வெள்ளயங்கிரி மறைத்து வைத்திருந்த கத்தியால் ஹரிஷை குத்தியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
அவரது உடல் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், கொலையாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.