தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்படும் என தேர்தலின்போது திமுக அரசு தெரிவித்திருந்தது.
ஆனால் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியைக் கூட உருவாக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக போர்க்கால நடவடிக்கை எடுத்து பெரம்பலூர், மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.