தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தால் திருமண சீசனுக்கு முன்னதாகவே மக்கள் நகைகளை அதிக அளவில் வாங்குவதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இளைஞர்கள் தங்க நாணயங்கள் மற்றும் பார்களை வாங்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாகவும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தங்கம் விலை உயர்ந்து வருவதால் காஞ்சிபுரத்தில் பட்டுப் புடவைகளின் விலை கடந்த எட்டு மாதங்களில் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.