புனேயில் சொகுசு கார் விபத்தில் இருவர் பலியான வழக்கில், சிறுவனின் ரத்த மாதிரியில் குளறுபடி ஏற்படுத்திய 2 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த விபத்துக்கு காரணமான சிறுவனின் தந்தை மற்றும் தாத்தாவை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, இந்த விபத்துக்கு பொறுப்பேற்குமாறு தங்களது கார் ஓட்டுநரை அவர்கள் மிரட்டியது தெரியவந்தது.
இந்த நிலையில், மருத்துவப் பரிசோதனையின்போது சிறுவனிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரியை குப்பையில் தூக்கி வீசிவிட்டு, அதற்குப் பதிலாக வேறு ஒருவரது ரத்த மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்திய அஜய் தவாரே உள்ளிட்ட 2 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.