திருச்சியில் உள்ள இளங்காட்டு மாரியம்மன் கோயிலில் ஆண்டுவிழாவையொட்டி பால்குட மற்றும் கரக உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் ஆயிரத்து எட்டு பால்குடங்களை பக்தர்கள் தலையில் சுமந்து சென்று வழிபட்டனர்.
மேலும் அலகு குத்தியும், அக்னிசட்டி மற்றும் கரும்பு தொட்டில் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் மாரியம்மனுக்கு பாலபிஷேகம் செய்தும் வழிபட்டனர்.