வேலூர் மாவட்டம், முள்ளிப்பாளையத்தில் வீட்டில் அறுந்துகிடந்த மின் வயரை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.
முள்ளிப்பாளையம் மாங்காய் மண்டியை சேர்ந்த சக்திவேல் என்பவர் வீட்டில் குளித்து விட்டு செல்லும்போது, மின் மோட்டாரின் அறுந்து கிடந்த வயரை மிதித்துள்ளார்.
இதில் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்த சக்திவேலை மீட்ட குடும்பத்தினர், அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார், உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.