ஆம்ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில், பிபவ் குமார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 3 நாட்களில் டெல்லி போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்திக்க, கட்சியின் எம்.பி. ஸ்வாதி மாலிவால் அவரது இல்லத்திற்கு சென்றார்.
அப்போது கெஜ்ரிவாலை சந்திக்கவிடாமல் தனிச்செயலர் பிபவ் குமார் தன்னை சரமாரி தாக்கியதாக ஸ்வாதி மாலிவால் புகார் அளித்ததின் பேரில், கடந்த 18ஆம் தேதி போலீசார் அவரை கைது செய்தனர்.
பிபவ்குமாரை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்து வரும் டெல்லி போலீசார் வரும் 28ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்துமாறு டெல்லி ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பிபவ் குமார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 3 நாட்களில் டெல்லி போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ள தேசிய மகளிர் ஆணையம், பிபவ் குமார் யாருடைய வழிகாட்டுதலின் பேரில் அழைக்கப்பட்டார் என்பதை அறிய, டெல்லி முதல்வர் உட்பட தொடர்புடைய அனைத்து நபர்களின் அழைப்பு விவரப் பதிவுகளை விசாரிக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.